வன்செயலில் ஈடுபட்ட காடையர்களுக்கு, விளக்க மறியல்; தெல்தெனிய நீதிமன்றம் உத்தரவு

🕔 March 6, 2018

தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரையுமே், இம் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்களை விடுவிக்குமாறு கோரி நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிங்களவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இடம்பெற்ற இனவாதத் தாக்குதலில் திகன பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர், அவரின் பல்லேகல கடையில் வைத்து கொல்லப்பட்டார்.

மேலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களும், நாசம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பல பள்ளிவாசல்கள் மீதும்  காடையர்கள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்