திகன செல்கிறார் அமைச்சர் றிசாட்; இஷ்ஹாக், பாயிஸ், அன்சில் ஆகியோரும் இணைவு

🕔 March 5, 2018

–  அஹமட் –

மைச்சர் றிசாட் பதியுதீன் தற்சமயம் கொழும்பிலிருந்து திகன நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றார்.

அமைச்சரின் ஊடகப் பிரிவினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே, அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.

அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷ்ஹாக், மேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உள்ளிட்டோரும் அமைச்சருடன் திகன நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சரின் ஊடகப் பிரிவினர் கூறினர்.

திகன பிரதேசத்தில் சிங்கள இனவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அறிந்து கொள்ளும் பொருட்டு, அவரின் ஊடகப் பிரிவினரை ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு வினவிய போதே, அமைச்சர் திகன பிரதேசத்துக்கு விரைந்து கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்