பிரதமர் வரவில்லை; மூக்குடைந்தார் மு.கா. தலைவர்

🕔 March 3, 2018

– அஹமட் –

ம்பாறை நகருக்கு இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தரமாட்டார் என தெரியவருகிறது.

அம்பாறையில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இனவாதத் தாக்குதலையடுத்து, பிரதமரை அழைத்துக் கொண்டு அம்பாறை நகருக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வருவார் என, மு.காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, பிரதமர் இன்றைய தினம் அம்பாறை வரமாட்டார் என தெரியவருகிறது.

இதேவேளை, நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் மட்டக்கப்புக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியை, மு.கா. தலைவர் அழைத்துக் கொண்டு அம்பாறை செல்லவுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த புதன்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அம்பாறை நகருக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதோடு, அரசாங்க அதிபர் தலைமையில் உயர் மட்டக் கூட்டமொன்றினை நடத்தி, முக்கிய தீர்மானங்கள் சிலவற்றினையும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்