வட்டார ரீதியாக 10 வீதமான பெண் உறுப்பினர்கள் தெரிவு: மஹிந்த தேசப்பிரிய

🕔 February 23, 2018

ள்ளுராட்சி சபைத் தேர்தலில் 10 வீதமான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும், கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 1.9 வீதமான பெண்களே தெரிவாகியிருந்தனர்.

எனினும்இ இம்முறைத் தேர்தலில் வட்டார ரீதியாகத் தெரிவான பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 வீதமாக உயர்வடைந்துள்ளது.

வட்டார அடிப்படையில் மொத்தமாக 5092 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் 535 பேர் பெண்களாவர்.

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 54 பெண் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

வட்டார டிப்படையில் பெண் உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவாகியுள்ள நிலையில், விகிசாதார முறையிலும் பெண் உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்