உள்ளுராட்சி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுமாறு வலியுறுத்தல்

🕔 February 22, 2018

ள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் விபரத்தை, வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிறி எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி முதல் உள்ளுராட்சி சபைஉறுப்பினர்களின் பதவிகாலம் ஆரம்பமாக உள்ளது.

உள்ளுராட்சி சபைகளுக்கான ஆசனங்களில் 50 வீதத்துக்கும் அதிகமான எண்ணிக்கையை தனியொரு அரசியல் கட்சி அல்லது சுயாதீன குழு பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

அந்த சந்தர்ப்பத்தில் குறித்த சபையின் தலைவர் மற்றும் உப தலைவர்கள், உறுப்பினர்களின் வாக்குகள் ஊடாக தெரிவுசெய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

Comments

புதிது பேஸ்புக் பக்கம்