அட்டாளைச்சேனை பைறூஸ், சட்டதரணியாக சத்தியப்பிரமாணம்

🕔 February 19, 2018

– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனையை சேர்ந்த எஸ்.எம்.எம். பைறூஸ் – இன்று திங்கட்கிழமை சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர் குழாம் முன்னிலையில், இந்தச் சத்தியப் பிரமான நிகழ்வு உச்ச நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை அறபாவித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியையும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் உயர்கல்வியையும் கற்ற பைறூஸ், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வணிக நிருவாக பட்டததாரியாவார்.

இந்த நிலையிலேயே, இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தினையும் பூர்த்தி செய்திருந்தார்.

பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து பின்னர், கைத்தொழில்அபிவிருத்தி சபையின் சபையின் மேம்படுத்தல் முகாமையாளராகவும் கடமையாற்றி வரும் இவர், ஏ.பி. சபூர்முகைதீன்- எஸ்.எல். பரீதா தம்பதியினரின் புதல்வராவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்