சட்டப்படி பதவியைத் தொடர்வேன்; பிரதமர் ரணில் அறிவிப்பு

🕔 February 16, 2018

பிரதமர் பதவியை – தான் தொடர்ந்தும் வகிக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு அமைவாக தனது பதவியை தொடரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இருந்து இந்த விசேட அறிவிப்பை பிரதமர் விடுத்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கும், கட்சியின் அடுத்த கட்ட தலைமைத்துவ குழுவொன்றை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்