மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம்

🕔 February 16, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் கொழும்பு வீட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கூட்டு எதிரணிக்குமிடையில் ஒப்பந்தமொன்று இன்று வெள்ளிக்கிழமை , மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சி ஆட்சியமைக்கும் பொருட்டு கூட்டு எதிரணி ஆதரவு வழங்கும் என்ற போதிலும், அந்த அரசாங்கத்தில் இணைந்து தற்காலிக பதவிகள் எவற்றினையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் நாமல் கூறியுள்ளார்.

ஐக்கி தேசியக் கட்சிக்கு தாம் எப்போதும் எதிரானவர்கள் எனத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்