மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்குச் சென்ற அமைச்சர், அங்கு தனது வாக்கை பதிவு செய்தார்.
தனது சொந்த இடத்திலேயே, இன்றுவரை தனது வதிவிடப் பதிவை அமைச்சர் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.