பெருமளவு கழிவு தேயிலைத் தூளுடன் நபரொருவர் கைது

🕔 February 9, 2018

– க. கிஷாந்தன் –

ழிவு தேயிலை தூள் ஒரு தொகையுடன் இன்று வெள்ளிக்கிழமை வெலிமடை புகுல்பொல பகுதியில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தேயிலைத் தூளின் எடை சுமார் 264 கிலோ கிராமாகும்.

குறித்த கழிவு தேயிலை தூளை கெப் ரக வாகனம் ஒன்றில், அனுமதி பத்திரம் இல்லாமல் அட்டம்பிட்டிய பகுதியிலிருந்து வெலிமடை பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸார் கைப்பற்றினர்.

இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு, தேயிலைத் தூள் மற்றும் வானம் ஆகியவற்றினையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்