தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

🕔 February 7, 2018

ள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அமைதியான சூழல் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார்.

இதேவேளை எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக கிடைக்க வேண்டிய விடுமுறையை பெற்றுக் கொடுக்குமாறு அரச மற்றும் தனியார் துறை தொழில் தருநர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு வழங்கக் கூடிய விடுமுறை சம்பளத்துடன் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுடன், ஊழியர்களின் வழமையான விடுமுறையில் எவ்வித இழப்பும் ஏற்படாத விடுமுறையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்