கிழக்கிலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு, விரைவில் நியமனம்: ஜனாதிபதியிடம் ஆளுநர் தெரிவிப்பு

🕔 February 6, 2018

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

பொத்துவிலுக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இவ்விடயம் தொடர்பில் எடுத்துக்கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 6068 வேலையில்லா பட்டதாரிகள் உள்ளனர் என்றும், இவர்களில் இம்மாதம் 20 ஆம் திகதி 387 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமங்கள் வழங்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிகுதி பட்டதாரிகளுக்கான நியமனங்கள் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் வழங்கப்பட்டு, மாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களுக்குள் அவர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்