புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

🕔 February 5, 2018

ள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 42 கட்சிகளையும், 222 சுயேட்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இந்த வேட்பாளர்களில் 341 உள்ளுராட்சி சபைகளுக்காக 8,356 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்தார்.

இதேவேளை, 13,400 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்தினுள், வெளியார் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்