எவன்காட் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, கோட்டா முன்வைத்த மனு நிராகரிப்பு

🕔 February 2, 2018

வன்காட் வழக்கிலிருந்து தன்னையும் மேலும் 07 பேரையும் விடுவிக்குமாறு கோரி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்திருந்த மனுவினை, கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தினை எவன்காட் நிறுவனம் செயற்படுத்துவதற்கான அனுமதியினை வழங்கியதன் மூலம், அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக, கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், மேலும் 07 பேருக்கும் எதிராக லஞ்ச ஊழல் திணைக்களம் 19 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்