நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

🕔 January 30, 2018

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்குக் காரணமாகும்.

எனவே, வான் பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம்.

நாட்டின்  வடபாகத்திலும், அம்பாந்தோட்டைமற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

அத்துடன் நாட்டை சூழவுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்