02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது

🕔 January 27, 2018

போதைப் பொருள் மாத்திரைகளுடன் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சித்த நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சற்று முன்னர் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த பெண், சுமார் 02 கிலோகிராம் எடையுடைய மாத்திரைகளை தன்வசம் இதன்போது வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபரான பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி 02கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்