நௌசாத்துக்கு எதிரான மு.கா.வினரின் ஆர்ப்பாட்டம், சம்மாந்துறையில் தோல்வி

🕔 January 26, 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் –

ம்மாந்துறையின் முன்னாள் தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் வேட்பாளருமான ஏ.எம். நௌசாத்துக்கு எதிராக, இன்று ஜும்மாத் தொழுகையை தொடர்ந்து பத்ர் ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்ட நடவடிக்யொன்று, தோல்வியில் முடிவடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை மு.காங்கிரஸினர் ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிய வருகிறது.

குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானவுடனேயே சம்மாந்துறை மக்களின் பலத்த எதிர்ப்பினால், ஆர்ப்பாட்டக்காரர்களால் ஓர் அடி கூட நகர முடியாமல் போனது. குறிப்பாக இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் சம்மாந்துறையிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லுறவை சிதைக்கும் என்ற வகையிலேயே மக்கள் ஒன்றிணைந்து, ஆர்ப்பாட்டத்தைத் தடுத்திருந்தனர்.

குறித்த நடவடிக்கையினை ஊடக காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் வகையில், பல ஊடகங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட முறுகல் நிலையால் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு உடனடியாக பாதுகாப்பு படையினர் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்