மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம்

🕔 January 25, 2018

– அஹமட் –

ல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடுபவரும் ரஹ்மத் மன்சூரின் வாகனம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளலில் தீப்பற்றி எரிந்ததில், வாகனம் முற்றாக நாசமாகியுள்ளது.

கல்முனை சாஹிப் வீதியில் வைத்து, இந்த வாகனம் இவ்வாறு தீக்கிரையானதாக தெரியவருகிறது.

இதன்போது, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் களத்தல் இறங்கி, ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்துள்ளனர்.

தனது அரசியல் பிரவேசத்தினை தாங்க முடியாத விசமிகளே, இவ்வாறு தனது வாகனத்துக்குத் தீ வைத்துள்ளதாக ரஹ்மத் மன்சூர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.எம். மன்சூரின் புதல்வரான ரஹ்மத் மன்சூர்; மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய இணைப்பாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்