ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு

🕔 January 24, 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றுவதற்கு சந்தர்ப்பமொன்றினை கேட்டிருந்த போதும், அதனை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

பிணை முறை விவகாரம் தொடர்பிலேயே, அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை வேண்டியிருந்தார்.

இது சிறப்புரிமைப் பிரச்சினையல்ல என்பதால், ரவி கருணாநாயக்க உரையாற்றுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தர்ப்பம் வழங்க மறுத்தார்.

ஆயினும், வேறு ஒரு தினத்தில் சந்தர்ப்பமொன்றினை வழங்க முடியும் எனவும், சபாநாயகர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது விட்டால், ஊடகங்கள் முன்னிலையில் தான் உரையாற்றுவேன் என்று இதன்போது, ரவி கூறினார்.

அப்படிச் செய்வதால் தனக்கு எதுவித பிரச்சினையும் கிடையாது என சபாநாயகர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்