ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்கள் மட்டும்தான்; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

🕔 January 15, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் 05 வருடங்களைக் கொண்டதாகும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்றின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

தனது பதவிக் காலம் தொடர்பில் கடந்த வாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உச்ச நீதிமன்றிடம் கருத்துக் கோரியிருந்தார்.

ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு, ஏகமனதாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத், நீதியரசர்களான  டெப், ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகார, சிசிர டி அப்றூ மற்றும் கே. சித்ரசிறி ஆகியோர், மேற்படி குழுவில் அங்கம் வகித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்