சத்தியம் மண்ணாங்கட்டி சத்தியம்; அன்சில் தொடர்பில் ஹக்கீம் பேசிய தொலைபேசி உரையாடல்; அம்பலப்படுத்துகிறது புதிது

🕔 January 8, 2018

– மப்றூக் –

“அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில், உங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவை பொய்யென்றால் உங்களை சத்தியம் செய்யுமாறு அழைக்கின்றாரே, நீங்கள் பதிலளிக்க வேண்டுமல்லவா” என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சத்தியம், மண்ணாங்கட்டி சத்தியம்” என்று, ஹக்கீம் பதிலளித்தார்.

குறித்த தொலைபேசி அழைப்பெடுத்தவருக்கும் மு.கா. தலைவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலின் முக்கிய பகுதிகள் வருமாறு;

அழைப்பெடுத்த நபர்: அன்சில் உங்களைப் பற்றி மோசமாகக் கதைக்கின்றாரே, அதற்கு நீங்கள் பதிலளிப்பதில்லையா?

ஹக்கீம்: பார்ப்போம் என்னத்தக் கதைக்கிறார் என்று பார்ப்பம். அவர்தான் வழமையாகக் கதைத்துக் கொண்டிருக்கிறார். பெரிய கதை. அந்தக் கதைகளுக்கு நாங்க பதில் சொல்லுவம், ஆனா நாங்க பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எத்தனையோ பேர் இருக்கிறார்கள் பதில் சொல்வதற்கு.

அழைப்பெடுத்த நபர்: சில குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் பதில் சொன்னால்தான் சரியாக இருக்கும். அவர் சத்தியம் பண்ணுவதற்கெல்லாம் கூப்பிடுகிறார்.

ஹக்கீம்: சத்தியம்…. மண்ணாங்கட்டி சத்தியம் பண்ணுற… (நக்கலாக சிரிக்கிறார்). என்ன பைத்தியகாரன்டப்பா அவன்.

இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்ற வேளையில், தான் கண்டியில் இருப்பதாகத் தெரிவித்த மு.கா. தலைவர் ஹக்கீம்; எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும், அம்பாறை மாவட்டத்துக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மீது பல்வேறுபட்ட பாரிய குற்றச்சாட்டுக்களை பொது மேடைகளில் அன்சில் சுமத்தி வருகின்றார். அதேவேளை, தான் ஹக்கீம் தொடர்பில் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யென்றால், அவற்றினை மறுத்து சத்தியம் செய்ய வருமாறு, ஹக்கீமை பகிரங்கமாக அன்சில் அழைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி உரையாடல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்