நாட்டின் குறைந்தளவு வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு; கேட்கும் போதே நடுங்கும் குளிர்

🕔 January 7, 2018

நாட்டில் மிகவும் குறைந்த வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 4.7 செல்சியல் வெப்பநிலை, நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில்  இரவலும், காலையிலும் குளிருடனான உலர்ந்த காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், நுவரெலியாவின் சில பகுதிகளில் உறைபனி ஏற்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில், காலை வேளைகளில் மூடுபனியுடனான காலநிலை நிலவும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டில் அதிக வெப்பநிலையாக இரத்தினபுரி மாவட்டத்தில் 32.7 செல்சியஸ் நேற்று நிலவியதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்