பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்: சி.பி. ரத்னாயக்க வலியுறுத்தல்
பிரதமர் ரணில் ரணில் விக்ரமசிங்க அவருடைய பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு முன்னராகவே அவர் இதனைச் செய்ய வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும், அவர்களின் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தினைத் தொடர்புபடுத்தியே, நாடாளுமன்ற உறுப்பினர் ரத்நாயக்க இதனைக் கூறினார்.
எவ்வாறாயினும், மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழுதாக விடுவிக்கப்பட்டு விட்டார் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.