லஞ்சம் பெற்ற அரச ஊழியர்கள் 234 பேர், கடந்த வருடம் கைது

🕔 January 2, 2018

ஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், கடந்த வருடம் மாத்திரம், 234 அரச ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக, லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, லஞ்சம் பெறும் அரச ஊழியர்களைக் கைது செய்வதற்காக, மேலும் 200 உத்தியோகத்தர்களை நியமிக்கவுள்ளதாக, லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஆரம்பம் முதல், இவர்களை நாடளாவிய ரீதியில் நிகமிக்கவுள்ளதாகவும், ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 1954 எனும் தொலைபேசி  இலக்கத்துக்கு அழைத்து, லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்