பொலிஸாரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது: பெப்ரல்

🕔 December 30, 2017

திர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பிலான வன்முறைகளைத் தடுப்பதற்கு, பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தாங்கள் கோரிக்கையொன்றினை முன்வைத்ததாக அவர் மேலும் கூறினார்.

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் சந்திப்பினை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இந்த தகவல்களை ஹெட்டியாராச்சி கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்