உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; 205 பேரின் முடிவுகள் இடைநிறுத்தம்

🕔 December 28, 2017

.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள், நேற்று புதன்கிழமை இரவு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

இதற்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சையின் போது முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பரீட்சைப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கு ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 2,53,483 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் தனியார் பரீட்சார்த்திகள் 77,284 பேர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்