தபால் மூல வாக்குகள், வேறாக அறிவிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

🕔 December 27, 2017

திர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வேறாக அறிவிக்கப்பட மாட்டாது என்று, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆனாலும், தபால் மூலமான வாக்குகள் வேறாகவே எண்ணப்படும் என்றும் அவர் கூறினார்.

தபால் வாக்குகள், மொத்த வாக்குகளின் எண்ணிக்கையுடன் சேர்த்துக் கூட்டப்பட்டு, இறுதி தேர்தல் முடிவுடன் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தபால் மூல வாக்குகள் வேறாக எண்ணப்பட்டு, அவற்றின் முடிவுகளும் வேறாகவே அறிவிக்கப்பட்டு வந்தமை நினைவுகொள்ளத் தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்