தேர்தல் சுவரொட்டிகளை அகற்றத் தவறும் பொலிஸார் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

🕔 December 27, 2017

தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றத் தவறும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மீது, ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, தேர்தல் பணிகளுக்குப் பாறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அகற்றப்படாமை குறித்து, பொலிஸ் தலைமையகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் தமது தேர்தல் கடமைகளை பக்கச் சார்பின்றி நிறைவேற்ற வேண்டும்.

மேலும், தேர்தல்கள் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அகற்றப்படாமை தொடர்பான முறைப்பாடுகளை, பொலிஸ் தேர்தல் பிரிவில் பதிவு செய்ய வேண்டும்.

எதிர்வரும் உள்ளுராட் சி தேர்தல் காலகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என, அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் முறையாக அறிவூட்டப்பட்டுள்ளனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்