தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி செயலாளர்களுக்கும் இடையில், நாளை கலந்துரையாடல்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில், நாளை புதன்கிழமை சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது.
இதன்போது, தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை உள்ளிட்ட, பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று, தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெற நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.