நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

🕔 December 16, 2017

நாடு முழுவதும் 04 மணித்தியாலங்கள் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1373 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதின்போது 06 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியவர்களும் அடங்குவர்.

சட்ட விரோத போக்குவரத்து, கஞ்சா வைத்திருந்தமை, சட்ட விரோதமாக மதுபானங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களும் இதன்போது கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்