கோட்டா கைதாவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு

🕔 December 15, 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதி குற்றப் புலானாய்வு பிரிவினர் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நீடிப்புச் செய்துள்ளது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், கோட்டாவை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் வழங்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவு, எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் – பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு, முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இதற்கமைய வழங்கப்பட்ட உத்தரவே, இன்று நீடிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்