அணி மாறிய சிறியாணிக்கு, ராஜாங்க அமைச்சர் பதவி

🕔 December 15, 2017

ன்றிணைந்த எதிரணியிலிருந்து ஜனாதிபதி மைத்திரி பக்கமாக இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிணங்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறியாணி, கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒன்றிணை எதிரணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்த சிறியாணி, தனது ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: அணி மாறினார் சிறியாணி; மஹிந்த தரப்பிலிருந்து மைத்திரிக்கு ஆதரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்