‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ நூல் வெளியீடு

🕔 August 13, 2015
Hisbullah - 04
– பழுலுல்லாஹ் பர்ஹான் –

‘நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்’ எனும் நூல் வெளியீட்டு விழா, நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்றில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக, மேற்படி நூல் வெளியிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. றஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் நூல் வெளியீட்டு விழாவில், பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

மேற்படி நூலின் அறிமுகத்தை – மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஷ்குமாரும், நூல் விமர்சனத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரபும், சிறப்புரையை தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ. செந்தில்வேலவரும் நிகழ்த்தினர்.

இதன் போது, நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூலின் முதற்பிரதியை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. றஸ்மி – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வைத்தார்.

இவ் விழாவில் – உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதிகள்,  ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Hisbullah - 02Hisbullah - 01Hisbullah - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்