மாகாண சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் நடத்த முடியும்: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 December 12, 2017

மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த முடியும் என்று, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்திக திமுனி டி சில்வா – உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் தாக்கல் செய்திருந்த மனு, நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர் இதனைக் கூறினார்.

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டவுடன், உடனடியாக தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கு, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படவில்லை என்றும், சில மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

இந்த நிலையில், மேற்படி வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்