ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து, மைத்திரியின் பக்கம் மேலும் ஐவர் தாவுகின்றனர்; இன்று தகவல் வெளியாகும்

🕔 December 11, 2017

ன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன் இன்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதனையடுத்து இவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கில், அவருடன் இணையவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு இடையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை, தன்பக்கம் கவர்ந்தெடுக்கும் விசேட நடவடிக்கையொன்றினை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். இதனடிப்படையிலேயே, மேற்படி ஐவரும் இணையவுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்