70 ஆயிரம் ‘ட்ரமடொல்’ மாத்திரைகளுடன், பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

🕔 December 10, 2017

கார் ஒன்றில் சுமார் 70ஆயிரம் மாத்திரைகளைக் கொண்டு சென்ற மூவரை, வாரியபொல பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

கைதானவர்களில் ஒருவர் பெண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் பிரதேசத்துக்கு, மேற்படி மாத்திரைகளைக் கொண்டு செல்லும் போது, இவர்கள் கைதாகியுள்ளனர்.

கடற்படையின் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல் ஒன்றுக்கிணங்க, வாரியபொல பொலிஸார் சோதனையிட்ட போது, மேற்படி தொகை மாத்திரையுடன், கடத்தியவர்கள் சிக்கினர்.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

‘ட்ரமடொல்’ எனும் மாத்திரைகள்தான், சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இது ஒருவகையான வலி குறைப்பு மாத்திரையாகும். இருந்தபோதும், ஒரே தடவையில் இதனை அதிகளவாக உட்கொள்ளும் போது, போதையினை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்