வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தி; திங்கள் முதல் புதன் வரை சமர்ப்பிக்கலாம்; தேசப்பிரிய தெரிவிப்பு

🕔 December 9, 2017

ற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க, 93 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், திங்கட்கிழமை (11ஆம் திகதி) முதல் புதன்கிழமை (13ஆம் திகதி) வரை, வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

அந்தவகையில், மேற்படி நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.15 வரை, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வேட்புமனு தாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட அலுவலகமும் செய்து முடித்துள்ளதாகவும், ஒவ்வொரு தேர்தல் அலுவலகத்துக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்