அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இன்று வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனை கொழும்பில் இன்று சந்தித்து, அவர் முன்னிலையில் நௌஷாத் இணைந்து கொண்டார்.
இந்த நிலையில், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தலைமை வேட்பாளராக நௌஷாட் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு)