அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு

🕔 December 5, 2017

ரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடாசாலைகள் அனைத்தும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08ஆம் திகதி) மூடப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, முதல் தவணைக்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 02ஆம் திகதி, மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, க.பொ.த. சாதரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்துவதற்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள், எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வியமைச்சு கூறியுள்ளது.

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகள் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை, 5,116 பரீட்சை நிலையங்களில் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்