சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 15 பேர் பலியாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
நாட்டின் 16 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 01 லட்சத்து 06 ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 694 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.