கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி

🕔 December 1, 2017

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்   ஜயந்த விஜேசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமையினை அடுத்து, சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இன்று வெள்ளிக்கிழமை ஜயந்த விஜேசேகர இணைந்து கொண்டார்.

ஒன்றிணைந்த எதிரணி சார்பாக, ஜயந்த இதுவரை செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜயந்தவின் இந்தக் கட்சித் தாவலானது, ஒன்றிணைந்த எதிரணிக்கு மட்டுமன்றி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணிக்கு குறிப்பிடத்தக்க இழப்பாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்