வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக, அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்

🕔 November 7, 2017
– பாறுக் ஷிஹான் –

டக்கு மாகாண சபையில் புதிய உறுப்பினராக அலிக்கான் ஷரீப் இன்று செவ்வாய்கிழமை பதவியேற்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகிய நிலையில், அவரின் இடத்துக்கு அலிக்கான் நியமிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இன்று அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் அவைக்கு அழைக்கப்பட்டபோது, அவர் தனது பதவிக் கடிதத்தை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கையளித்தார்.

இதனையடுத்து அவர் சபை அமர்வுகளில் கலந்துகொண்டு தனது முதலாவது உரையினை ஆற்றினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்