நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு

🕔 October 27, 2017

– மொஹமட் அம்மார் –

மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை, சில பௌத்த அமைப்புக்கள் நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டின்போது முன்வைத்திருந்தன.

இன்று ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, மாடுகளை ஏற்றிச் செல்வதை தடை செய்துள்ளார். இவற்றை தொடர்புபடுத்தி பார்க்கின்றபோது, இனவாதிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விடயம் நடந்தேறியுள்ளமை தெளிவாகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனவாத சிந்தனை கொண்டவர் என்பது பல விடயங்களில் புலனாகியுள்ளபோதிலும், இப்படி விரைவாக இனவாதிகளின் சிந்தனைகளை செவிமடுப்பவராக கருதியிருக்கவில்லை.

மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லுவதை உடனடியாக தடைசெய்யுமளவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எது உடனடிக்காரணியாக அமைந்தது?

அண்மைக்காலத்தில் சொல்லுமளவு இப்படியானஒரு தேவை எழுந்திருக்கவில்லை. மாடுகளை வாகனங்களில் ஏற்றிச்செல்வதை தடை செய்கின்ற போது, அவற்றை நடத்திக் கொண்டு உரியஇடங்களுக்கு கொண்டு செல்வர். மிக நீண்ட தூரங்களுக்கு இப்படி கொண்டுசெல்கின்ற போது, மாடுகள் மிகவும் சிரமத்தை எதிர்கொள்ளும். ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவின் இத் தடைதான் மிருக வதைக்கு வழி கோலப்போகிறது.

மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தடை செய்தால், அவற்றை உரிய இடங்களுக்கு கொண்டு செல்ல இவ்வரசாங்கம் எவ்வாறான மாற்று வழியை செய்யப்போகிறது?

சில வேளை மாடுகளுக்கு இறக்கை பூட்டிதரப்போகிறார்களோ தெரியவில்லை. அது என்ன மாடுகளுக்கு மாத்திரம் இப்படியான விசேட தடைகள் என சிந்தித்தாலே, இதிலுள்ள இனவாத நோக்கைபுரிந்துகொள்ளலாம்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்