ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

🕔 October 13, 2017

க்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது உலக அளவிலும்,  ஐ.நா அமைப்புக்குள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இரினா போகோவா கூறுகையில்; “யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுகிறோம் என்று எனக்கு அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வமாக கடிதம் வந்துவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. இந்த முடிவு யுனெஸ்கோவுக்கு இழப்பாகும். அமெரிக்காவுக்கும் இழப்புத்தான்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, பாலஸ்தீனத்தை அதன் முழு நேர உறுப்பினராக அங்கீகரித்தது. அப்போதே இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு வழங்கும் நிதியையும் நிறுத்திக்கொண்டது.

பின்னர், அமெரிக்காவுக்கும் யுனெஸ்கோவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்