வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து
வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்று, முன்னாள் அமைச்சரும் புலிகளின் தளபதியுமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு – கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்;
“வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது – தந்தை செல்வாவின் கோரிக்கையாகும். அதனை யாரும் மாற்ற முடியாது. வடக்குடன் கிழக்கு இணைய வேண்டும் என்பதே, எமது கட்சியின் கோரிக்கையாகும்” என்றார்.