வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோமெனக் கூறி, ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது: ஹக்கீம் தெரிவிப்பு

🕔 October 5, 2017

டக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று, துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயற்சிக்கின்ற தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே, மு.கா. தலைவர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­வேண்டும். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். அது தொடர்பில் கலந்­து­ரை­யாட முஸ்லிம் சகோ­தர்­க­ளுக்கு அழைப்பு விடு­கின்றோம். அதே­வே­ளையில் இணைந்த வடக்கு கிழக்­கிற்கு படித்த பக்­கு­வ­மான முஸ்லிம் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக்­கு­வதை எதிர்க்­கப்­போ­வ­தில்லை என எதிர்க்­கட்­சித்­த­லைவர் ரா. சம்பந்தன் மன்­னாரில் தெரி­வித்திருந்தார்.

அதே­நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி தலை­வர்­களுள் ஒரு­வரும் விளையாட்­டுத்­துறை பிரதி அமைச்­ச­ரு­மான எச்.எம்.எம். ஹரீஸ், வடக்கு கிழக்கு இணைப்­புக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளியிட்­டி­ருந்தார். குறிப்­பாக வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் சுதந்­தி­ரக்­கட்சி, மற்றும் கூட்டு எதிர்க்­கட்­சியின் நிலைப்­பாடு நம்­பிக்­கை­யான ஒளிக்­கீற்று என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்தக் கருத்­துக்கள் தொடர்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீமிடம் குறித்த ஊடகம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கா­ல­மாக பேச­ப்­ப­டு­கின்ற விட­ய­மாகும். இது இரண்டு சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும். இந்த விடயத்தில் எமது கட்சி நீண்­ட­கா­ல­மாக ஒரு நிலைப்­பாட்­டினைக் கொண்டிருக்கின்றது.

குறிப்­பாக எமது மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது, கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு தனியானதொரு அலகு அமை­ய­வேண்டும் என்று கொள்­கை­ய­ள­வி­லான முடிவொன்றை எடுத்­தி­ருந்தார்.

இந்த தீர்­மா­னத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தற்­போது வரையில் விலகவில்லை. இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக நாம் தமிழ் சகோ­தர்­களின் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். நடத்­திக்­கொண்டும் இருக்­கின்றோம். மேலும் நிபந்­த­னை­க­ளு­ட­னான நீண்ட கலந்­து­ரை­யா­டல்­களும் அவ­சி­ய­மா­கின்­றன.

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் தொடர்பில் ஒரு வகை மெத்­தனப் போக்­கையே கடை­பி­டிக்க வேண்­டி­யுள்­ளது. வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக பதி­ல­ளித்து விட முடியாது. இதற்கு கார­ணங்கள் உள்­ளன. 1987ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பில் 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்­பட்டு மாகாண சபை முறை­மை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டது.

இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டன. ஒரு ­வ­ரு­டத்­துக்குள் கிழக்கு மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு நீடிப்­பதா? இல்லையா? என்­பது தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் கூறப்­பட்­டது. சர்வ,ஜன வாக்கெ­டுப்­பொன்றை நடத்­து­வதன் ஊடாக இரண்டு சகோ­தர சமுகங்களுக்கு இடையில் விப­ரீதம் ஏற்­ப­டுத்த அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்த்­தன தலைமை­யி­லான அர­சாங்கம் முயன்­றது. ஆனால் அத்­த­கைய நிலை­மைகள் எல்லாம் தெய்­வா­தீ­ன­மாக கடந்து போயின.

தற்­போ­தைய நிலையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­கின்ற வகையில் தனி அலகு அமை­யப்­பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அதற்­காக நீண்ட பேச்­சு­வார்த்­தைகள், நிபந்­த­னை­யு­ட­னான முன்­னெ­டுப்­புகள், விட்டுக் கொடுப்­புகள் என பல விட­யங்கள் இடம்­பெ­ற­வேண்­டி­யுள்­ளன.

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது. அது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு இவ்­வாறு ஒரே நிரையில் பதி­ல­ளிப்­பது அவர்­களின் நிகழ்ச்­சிக்கு தூப­மி­டு­வ­தா­கவே அமையும். தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டையில் எந்­த­வி­த­மான நல்­லு­றவும் பேணப்­படக் கூடாது என்ற போக்­கையே இத்­த­கையோர் கொண்­டுள்­ளனர். இது பிழை­யான அணு­கு­மு­றை­யாகும்.

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் நாடாளு­மன்­றத்­தி­­ன் ஊடகாவே அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க இரு மாகா­ணங்­களும் அங்­கீ­காரம் வழங்­கி­னாலும் அது சாத்­தி­ய­மா­காது. இவ்­வா­றான சில காப்­பீ­டு­களும் இருக்கும் நிலை­யிலே, இந்த விட­யங்­களை சில தரப்­பினர் பெரிதுபடுத்தி ஊதிப்­பெ­ரி­தாக்கி ஏதோ விப­ரீதம் நடந்­துது போல காட்டி, அர­சியல் பிழைப்பு நடத்­து­கின்­றனர்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவ­ச­ரப்­பட்டு பேசு­வது அர­சியல் பிழைப்புவாத பேச்­சுக்கள் மட்­டுமேயாகும். ஒரே இரவில் அல்­லது நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்­து­வி­டு­வ­தைப்­ போன்று பேசு­கின்­றனர். முஸ்­லிங்­களின் உடன்பாடின்றி இதனை செய்ய முடி­யாது. செய்­யவும் மாட்டோம் என சம்­பந்­தனே கூறி­யி­ருக்­கிறார். வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர், எமக்கு தீர்க்க வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு அடுத்தபடியாகவே இவ்விடயம் தொடர்பில் ஆராய முடியும்” என்றார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்