பிரதியமைச்சர் ஹரீஸின் நிதியில், இறக்காமம் மக்களுக்கு வாழ்வாதார உதவி

🕔 October 2, 2017
– அகமட் எஸ். முகைடீன் –

றக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் தலைமையில்  நடைபெற்ற இந் நிகழ்வில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி எப். நஹீஜா முஸாபிர், இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மௌலவி யு.கே. ஜபீர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹமீட், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், கிராம சேவை உத்தியோகத்தர்கள், மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 62 குடும்பபங்களுக்கு சுய தொழிலை மேற்கொள்ளும்வகையில் தையல் இயந்திரம், கேஸ் சிலின்டர் மற்றும் அடுப்பு போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அத்தோடு கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவையினை திறன்பட முன்னெடுப்பதற்கு ஏதுவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட அலுவலக கைப்பை  கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு இந்நிகழ்வின்போது பிரதி அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்