சம்மாந்துறையில் யானைத் தாக்குதல்: வீடுகள், குடியிருப்பு பகுதிகளில் சேதம்

🕔 September 25, 2017
– யு.எல்.எம். றியாஸ் –

ம்மாந்துறை அலவாக்கரை பிரதேசத்தில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டுயானைகள் – வீடுகள், சுவர்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன.

இதனால் அங்குள்ள ஒரு  வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதேவேளை வீட்டுத்தோட்டங்களும் சேதமாக்கியுள்ளன . இந்த நிலையில் வீட்டில் உறங்கியவர்கள் உயிராபத்துமின்றி தப்பிச்சென்றுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டுயானைகளின் தொல்லைகள்  தற்போது அதிகரித்து காணப்படுகின்றன.

சம்மாந்துறை பிரதேசத்தின் எல்லைக் கிராமங்கள் தற்போது காட்டுயானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் இரவு வேளைகளை மிகுந்த அச்சத்துடன் கழித்து வருகின்றனர்.

நேற்றும், இன்றும் சம்மாந்துறை பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்குதலால் பலபிரதேசங்கள் சேதத்திற்குள்ளாகியுயள்ளன.

இந்த நிலையில், இன்று அதிகாலை யானைத் தாக்குதலுக்கு இலக்கான அலவாக்கரை பிரதேசத்துக்கு சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசியக் கடைசியில் பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி  சென்று, சேதங்களைப் பார்வையிட்டார்.

இதேவேளை நேற்று சம்மாந்துறை சமிடபுரம் உடங்கா – 2 கிராமத்திலுள்ள அரிசி ஆலையொன்றும் யானைத்தாக்குதலுக்கு இலக்கானது. இதன்போது  அரிசி ஆலையினுள் இருந்த நெல் மூடடைகளையும் யானை சேதப்படுத்தியுள்ளது.

சம்மாந்துறை பிரதேசத்தில் நெல் வயல்களின் அறுவடைக்குப்பின்னரான காலத்திலேயே,  காட்டு யானைகள் ஊருக்குள் வருகின்றமை அதிகரித்து வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்