பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது

🕔 September 6, 2017

த்திய வங்கியின் பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸுக்குக் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.

அர்ஜூன் அலோஸியஸுக்கும், பர்பேசுவல் ட்ரேஸரிங் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் மூலம், இந்தத் தகவலை பிணை முறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மத்திய வங்கியின் பிணை முறி ஏலம் குறித்த உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸ் வசம் இருந்ததாக இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து விசாரிக்க ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வளாகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்