மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர்
🕔 September 5, 2017
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் , இன்று செவ்வாய்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அவரின் தங்காலை கால்டன் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டினை செய்துள்ளனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதியுடன் முஸ்லிம் மக்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அறிய முடிகிறது.
தன்னைச் சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறுகையில்; வெளிநாட்டுச் சதி மூலமாகவே தான் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.
மேலும், பேருவளை போன்ற இடங்களில் இடம்பெற்ற கலவரங்களுக்கு தான் காரணமில்லை என்றும், அதன் போது தான் வெளிநாட்டில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.